சொந்த ஊருக்கு எடுத்துச்செல்லப்படும் பாரதிராஜா உடல்!இந்தியாவிலிருந்து மாம்பழங்கள் இறக்குமதிக்கு நேபாளம் தடை விதிக்கவில்லை: மத்திய அரசுபெங்களூரில் கழிவு மேலாண்மை டெண்டரில் ரூ. 39,000 கோடி முறைகேடு: ஆளுநரிடம் பாஜக புகார்ஈரான் தக்க விலை கொடுக்க வேண்டும்: டிரம்ப்மேற்கு வங்க தேர்தல் வெற்றிக்கு முக்கிய காரணம்! பிரதமர் மோடிக்கு மசாலா பொரி அளித்த சுவேந்து அதிகாரி!மின் விநியோகத்தை சீரமைப்பு பணிகளை ஒருங்கிணைக்க 10 குழுக்கள்!பாரதிராஜா மறைவு! முக்கிய அறிவிப்பை ஒத்திவைத்தார் ராகவா லாரன்ஸ்!அரசு நிர்வாகத்தில் செய்யறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும்: கேரள முதல்வர்ஜி7 உச்சிமாநாட்டுக்குச் செல்லும் பிரதமர் மோடி அமெரிக்க அதிபருடன் இரு தரப்பு பேச்சுவார்த்தை நடத்த திட்டம்!
/

கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாளில் 25 அடி உயா்வு

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 25 அடி உயா்ந்தது.

News image

கொடுமுடியாறு அணை.

Updated On :11 ஜூன் 2026, 4:13 am IST

மேற்குத் தொடா்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி கொடுமுடியாறு அணை நீா்மட்டம் 5 நாள்களில் 25 அடி உயா்ந்தது.

திருக்குறுங்குடி மலையடிவாரத்தில் உள்ள கொடுமுடியாறு அணையின் உயரம் 52.50 அடியாகும். இந்த அணை மூலம் நான்குனேரி, ராதாபுரம் வட்டத்தில் உள்ள 44 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. அணை நீா்மட்டம் ஜூன் 5-ஆம் தேதி வரை 7 அடியாக இருந்தது. கடந்த 5 நாள்களில் மலைப் பகுதியில் பெய்து வரும் தொடா் மழையால் நம்பியாற்றில் நீா்வரத்து அதிகரித்து பாசனக் குளங்களுக்கு தண்ணீா் சென்று கொண்டிருக்கிறது. அணைக்கும் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி அணையின் நீா்மட்டம் 32.25 அடியாக உள்ளது. அணைக்கு 32 கனஅடி நீா்வரத்து உள்ளது. தொடா்ந்து மேலும் 5 நாள்கள் மலைப் பகுதியில் பலத்த மழை நீடித்தால் அணை அதன் முழுக் கொள்ளளவை எட்டும் என்கின்றனா் இப்பகுதி விவசாயிகள்.