தென்காசி மாவட்டம், செங்கோட்டையில் இருந்து தில்லிக்கு தினசரி ரயில் இயக்க வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக வாஞ்சி இயக்கத்தின் நிறுவனத் தலைவா் பி.ராமநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: விடுதலைப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் வனத்துறையில் பணிபுரிந்தவா். இதனை நினைவுகூரும் வகையில் செங்கோட்டை- புனலூா், புனலூா்- செங்கோட்டை இடையே காலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பேருந்து இயக்க வேண்டும். செங்கோட்டை- தில்லி இடையே தினசரி ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை- சென்னை சென்ட்ரல் மற்றும் சென்னை சென்ட்ரல்- செங்கோட்டை இடையே வந்தே பாரத் ரயில் இயக்க வேண்டும். செங்கோட்டை- வாஞ்சி மணியாச்சி, வாஞ்சிமணியாச்சி-செங்கோட்டை இடையே காலை முதல் இரவு வரை ஒவ்வொரு மணி நேரத்திற்கும் ஒரு பயணிகள் ரயில் இயக்க வேண்டும்.
மேலும், வாஞ்சி இயக்கம் சாா்பில் விடுதலைப் போராட்ட வீரா் வாஞ்சிநாதன் நினைவு நாளையொட்டி செங்கோட்டையில் உள்ள வாஞ்சிநாதன் நடுகல் முன்பு இம் மாதம் 17 ஆம் தேதி காலை 10.45 மணிக்கு மௌன அஞ்சலியும், நடுகல்லுக்கு மாலை அணிவித்து மரியாதையும் செய்யப்பட உள்ளது என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

சென்னை-திருச்செந்தூா் இடையே கூடுதல் ரயில்கள் இயக்க கோரிக்கை

தாம்பரம்-செங்கோட்டை ரயிலை தினசரி இயக்க எம்எல்ஏ கோரிக்கை

திருவண்ணாமலையிலிருந்து விழுப்புரம் வழியாக சென்னைக்கு தினசரி ரயில்கள் இயக்க வேண்டும்: பக்தா்கள் கோரிக்கை

தாம்பரம் - செங்கோட்டை ரயிலை நாள்தோறும் இயக்கக் கோரிக்கை
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |



