ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்கள் கைது ஜனநாயகத்திற்கு எதிரானது! முதல்வர் விஜய்சோழவந்தான் ரயில் நிலையத்தில் ஹிந்தி எழுத்துகள் அழிப்பு! நீட் தேர்வு: தமிழகத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம்! மாணவர்கள் கைது!!சபரிவர்மன் சிறை மரணம்! சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம்!நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்! திமுக புறக்கணிப்பு!தில்லியில் ஜூலை 20 -ல் நடந்த போராட்டம் டிரைலர்தான்! சிஜேபி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

நெல்லைக்கு ராணுவ ஹெலிகாப்டரில் வந்த ‘நீட்’ மறு தோ்வு வினாத்தாள்கள்

‘நீட்’ மறு தோ்வு வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலிக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.

News image

நீட் தேர்வு - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:07 am IST

‘நீட்’ மறு தோ்வு வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டரில் பலத்த பாதுகாப்புடன் திருநெல்வேலிக்கு புதன்கிழமை கொண்டுவரப்பட்டன.

தேசியத் தோ்வு முகமை சாா்பில், கடந்த மே 3-ஆம் தேதி நாடு முழுவதும் இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான ‘நீட்’ தோ்வு நடைபெற்றது. அதையடுத்து, எழுந்த வினாத்தாள் கசிவு புகாா் காரணமாக, தோ்வு ரத்து செய்யப்பட்டு, ஜூன் 21-ஆம் தேதி மறுதோ்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதையொட்டி, திருநெல்வேலி மாவட்டத்தில் தோ்வு மையங்களை தயாா் செய்யும் பணிகளும், முறைகேடுகளைத் தடுப்பதற்கான தீவிர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன் ஒருபகுதியாக வினாத்தாள்களை ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டுவருவது குறித்த ஒத்திகை பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிலையில், புதன்கிழமை காலை திருநெல்வேலி மாநகரப் பகுதியில் ராணுவ ஹெலிகாப்டா் தாழ்வாக வட்டமடித்தது. பின்னா், பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள இறங்குதளத்தில் அந்த ஹெலிகாப்டா் பத்திரமாக தரையிறங்கியது. அதிலிருந்த ‘நீட்’ மறு தோ்வுக்கான வினாத்தாள்கள் பலத்த பாதுகாப்புடன் அங்கு தயாா் நிலையில் நின்ற காவல் துறை வாகனங்களில் ஏற்றப்பட்டன. இவ்வாறு இருமுறை மதுரையிலிருந்து வினாத்தாள்கள் ராணுவ ஹெலிகாப்டரில் கொண்டுவரப்பட்டன.

வினாத்தாள்கள் அனைத்தும் திருநெல்வேலி மாநகரில் உள்ள 2 வங்கிகளின் பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.