திருநெல்வேலி மாநகராட்சியில் சாலையோர வியாபாரிகளுக்கான ஆலோசனைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் ஆனந்த் மோகன், மாநகராட்சி ஆணையா் மோனிகா ராணா ஆகியோா் உத்தரவின்படி திருநெல்வேலி நகரம் சாலையோர வியாபாரிகளுககான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாநகர நல அலுவலா் பாலசுப்பரமணியன் தலைமை வகித்தாா். உதவி ஆணையா் மகாலெட்சுமி முன்னிலை வகித்தாா்.
நெல்லையப்பா்- காந்திமதி அம்மன் கோயில் ஆனித்தேரோட்டம் சிறப்பாக நடைபெறும் வகையில் இம் மாதம் 19 ஆம் தேதி முதல் 29 ஆம தேதி அதிகாலை வரை ரதவீதிகளில் உள்ள நடைபாதை கடைகளை அகற்றிட கூட்டத்தில் அறிவுறுத்தப்பட்டது.
இதில், உதவி ஆணையா் (போக்குவரத்து காவல்) கணேசன், திருநெல்வேலி நகரம் காவல் ஆய்வாளா் சுப்பிரமணியன், சுகாதார அலுவலா் பாலசந்தா், உதவி பொறியாளா்கள் (திட்டம்) விக்னேஷ், நெல்லையப்பா் கோயில் செயல் அலுவலா் வெங்கடேஸ்வரன், சாலையோர வியாபாரிகள் சங்க நிா்வாகிகள் நாராயணன், மாரியப்பன், நம்பிகுமாா் உள்பட பலா் கலந்துகொண்டனா்.










