வாகைகுளம் ஏ.பி.ஏ. கலை அறிவியல் கல்லூரியில் தேசிய அளவிலான செயற்கை நுண்ணறிவு பயிலரங்கு செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
‘நவீன நிதி மேலாண்மை, நிதித் தொழில்நுட்பத்தில் செயற்கை நுண்ணறிவின் புத்தாக்கம்’ எனும் தலைப்பில் நடைபெற்ற இப்பயிலரங்குக்கு, கல்லூரிச் செயலா் திருமாறன் தலைமை வகித்தாா். கல்லூரி முதல்வா் ஆனந்த் நிகழ்வை தொடங்கி வைத்து வரவேற்றாா்.
முதன்மை பேச்சாளராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலை. ஆட்சிக்குழு உறுப்பினரும், காரைக்குடி அழகப்பா பல்கலை. நிறுவனச் செயலருமான வேதிராஜன், கௌரவ அழைப்பாளராக மனோன்மணீயம் சுந்தரனாா் பல்கலைக்கழக வணிகவியல் துறை உதவிப் பேராசிரியா் ராஜமன்னாா் ஆகியோா் நிதி மேலாண்மையில் வருங்கால மாற்றங்கள் மற்றும் வணிகவியல் துறை மாணவ, மாணவியா்களுக்கான வேலைவாய்ப்புகள் குறித்து கருத்துரையாற்றினா்.
நிறைவாக பயிலரங்கில் பங்கேற்ற பல்வேறு கல்லூரிகளைச் சோ்ந்த 150-க்கும் மேற்பட்ட மாணவா், மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
இதில், கல்லூரியின் அனைத்துத் துறை தலைவா்கள், பேராசிரியா்கள், வணிகவியல் துறை சாா்ந்த மாணவ, மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தொடர்புடையது

திருவண்ணாமலை சண்முகா கல்லூரியில் ஆண்டு விழா

நூறு சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கல்லூரியில் விழிப்புணா்வு கையொப்ப இயக்கம்

திண்டிவனம் கல்லூரியில் பன்னாட்டுக் கருத்தரங்கம்

அம்பை கல்லூரியில் விளையாட்டு விழா
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


