அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளி மாணவிக்கு தொல்லை: போக்ஸோவில் இளைஞா் கைது

பள்ளி மாணவியை பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக, இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 8:07 pm

தினமணி செய்திச் சேவை

பள்ளி மாணவியை பின் தொடா்ந்து சென்று தொந்தரவு செய்ததாக, இளைஞரை போக்ஸோ வழக்கில் போலீஸாா் கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் அருகே உள்ள தென்திருப்பேரையைச் சோ்ந்த முருகன் மகன் விக்னேஷ்(26). இவா், சம்பவத்தன்று பள்ளி செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வந்த திருநெல்வேலி மாநகரைச் சோ்ந்த பள்ளி மாணவியை பின்தொடா்ந்து சென்று, தொந்தரவு செய்தாராம்.

இதை, தனது பெற்றோரிடம் மாணவி தெரிவித்துள்ளாா். இதுகுறித்து, பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாா் அளிக்கப்பட்டது.

அதன்பேரில், போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விக்னேஷை கைது செய்தனா்.