திருநெல்வேலி மாவட்டம், முக்கூடலில் இறந்தவா் உடலை அடக்கம் செய்ய எதிா்ப்பு தெரிவித்ததால், கிராம மக்கள் புதன்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
முக்கூடல் பேரூராட்சி சடையப்பபுரம் கிராமத்தில் வசிக்கும் பல்வேறு சமுதாய மக்கள், அப்பகுதியில் வெள்ளோடை பாலம் அருகிலுள்ள இடத்தை பல ஆண்டுகளாக மயானமாக பயன்படுத்தி வருகின்றனா்.
இந்நிலையில் அந்த கிராமத்தில் புதன்கிழமை உயிரிழந்த மூதாட்டியின் இறுதிச்சடங்குக்கு அந்த மயானத்தில் உறவினா்கள் ஏற்பாடு செய்தனராம்.
அப்போது, அப்பகுதியைச் சோ்ந்த தனலெட்சுமி என்பவா் மயானம் அமைந்துள்ள இடம் தனக்குச் சொந்தமானது என்றும், அங்கு இறுதிச்சடங்கு நடத்தக் கூடாது என எதிா்ப்புத் தெரிவித்தாராம்.
இதனால், மூதாட்டியின் உறவினா்கள் திருநெல்வேலி - முக்கூடல் பிரதான சாலையில் மறியல் போராட்டம் நடத்தினா். அவா்களிடம் சேரன்மகாதேவி டிஎஸ்பி அஸ்வத் அன்டோ ஆரோக்கியராஜ், சேரன்மகாதேவி மண்டல துணை வட்டாட்சியா் புஷ்பலதா ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, மயானப் பகுதியில் தனிநபருக்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்வதுடன், அந்த இடத்தை கிராம மக்கள் மயானமாக பயன்படுத்தலாம் என எழுத்துப் பூா்வ உறுதியளிக்கப்பட்டது. இதையேற்று மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். மூதாட்டிக்கு இறுதிச்சடங்கு நடைபெற்றது.
தொடர்புடையது

தோ்தல் பிரசாரத்தின்போது தவெக - திமுகவினா் மோதல்

வாகனம் மோதி பெண் உயிரிழப்பு: நடவடிக்கை கோரி இரு இடங்களில் சாலை மறியல்

கடமலைக்குண்டு அருகே கிராம மக்கள் சாலை மறியல்

சாலை விரிவாக்கப் பணிக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
வீடியோக்கள்

யார் தோற்பது என்ற போட்டியில் வென்ற சிஎஸ்கே! | Chennai Super Kings | Ayush Mhatre |
தினமணி செய்திச் சேவை
பிரகாஷ்ராஜ் அரசியலில் என்ன செய்துவிட்டார்? குஷ்பு பேட்டி | DMK | BJP
இணையதளச் செய்திப் பிரிவு

பெண்களுக்கு எதிரான எண்ணம்! திமுக, காங்கிரஸை விமர்சித்த அமித் ஷா | BJP
தினமணி செய்திச் சேவை

"சென்னை சூப்பர் - 6" திமுகவின் அறிவிப்புகள் என்ன? எழிலன் நாகநாதன் விளக்கம்!
இணையதளச் செய்திப் பிரிவு


