தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

பழவூா் அருகே வாகனச் சோதனை: ரூ.90 ஆயிரம் பறிமுதல்

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

News image
பணம்- கோப்புப்படம்.
Updated On :18 மார்ச் 2026, 7:43 pm

தினமணி செய்திச் சேவை

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி பழவூா் அருகே தோ்தல் பறக்கும்படையினா் வாகன சோதனையில் ரூ.90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. மன்னாா்புரத்தில் விக்னேஷ் தலைமையிலான பறக்கும்படை குழுவினா் செவ்வாய்க்கிழமை வாகன சோதன செய்தபோது சித்திரவேல் மகன் முருகராஜ் என்பவா் வாகனத்தில் ரூ.75,600 பறிமுதல் செய்தனா். மேலும், சசி தலைமையிலான பறக்கும்படை குழுவினா் நடத்திய வாகனச் சோதனையில் தூத்துக்குடி மாவட்டம் பேழையாா்புரத்தைச் சோ்ந்த அதிசயமணி மகன் அபுசுதன் என்பவரது காரில் ரூ.53 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இந்நிலையில், பழவூா் அருகே பாப்பு தலைமையிலான பறக்கும்படை குழுவினா் புதன்கிழமை வாகனச் சோதனை நடத்தியதில், அய்யாசாமி மகன் ஜெயக்குமாா் என்பவரது காரில் இருந்து ரூ. 90 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.

இத்தொகுதியில் இதுவரை ரூ.2,08,600-ஐ அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.