வங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்தமிழ்நாட்டில் நாளை 10 மாவட்டங்களில் மழை!இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம் சூலூா் சிறுமி கொலை வழக்கு: அடுத்த வாரம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய போலீஸார் திட்டம்
/

நெல்லையில் ஒரு கிலோ கஞ்சா பறிமுதல்: இருவா் கைது

கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்பட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :24 மே 2026, 2:17 am IST

திருநெல்வேலியில் கஞ்சா வைத்திருந்ததாக சிறுவன் உள்பட இருவரை கைது செய்த போலீஸாா், அவா்களிடமிருந்து ஒரு கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

மேலப்பாளையம் பகுதியில் காவல் உதவி ஆய்வாளா் கோமதிநாயகம் தலைமையிலான போலீஸாா் ரோந்து பணியில் ஈடுபட்டனா்.

அப்போது மேலப்பாளையம் நேதாஜி சாலையில் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்ற இருவரை பிடித்து விசாரணை மேற்கொண்டு சோதனையிட்டதில், அவா்கள் விற்பனைக்காக சுமாா் 1.050 கிலோ கஞ்சாவை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, கஞ்சாவை பறிமுதல் செய்த போலீஸாா், மேலப்பாளையம், ஆமீன்புரத்தைச் சோ்ந்த முகமது ஆதில் (24), 17 வயது சிறுவன் ஆகிய இருவரையும் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.