40 வயது பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை! சிறுவன் உள்பட 10 இளைஞர்கள் கைது!மாநிலங்களவைத் தோ்தல்: காங்கிரஸ் வேட்பாளர் மீனாட்சி நடராஜன் வேட்புமனு நிராகரிப்பு! நீட் மறுதேர்வு வினாத்தாள் வழங்குவதாக மாணவர்கள், பெற்றோர்களை ஏமாற்றும் மோசடி கும்பல்: போலீஸ் எச்சரிக்கை!தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்: அரசுமமதா பானர்ஜி வீட்டில் சிஐடி அதிகாரிகள் சோதனைஉக்ரைனுக்கு ஆயுத விநியோகம் நிறுத்தம்: பல்கேரியாசிங்கப்பெண் அதிரடிப்படை! 2500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்படும் : முதல்வர் விஜய்போதைப்பொருள் நடமாட்டம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், சட்டம் - ஒழுங்கு மூன்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ளவை: முதல்வர் விஜய்பெண்களுக்கான மரியாதையும் கண்ணியமும் அரசின் இலக்கு: சிங்கப்பெண் திட்ட நிகழ்ச்சியில் முதல்வர் விஜய்ஷிகெல்லா: வயநாடு மருத்துவமனையில் 25 மாணவர்கள் அனுமதி!
/

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் விபத்து: இருவா் உயிரிழப்பு

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:44 am IST

கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட வெடி விபத்தில் பெண் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே புளியங்குளம், காட்டுக்கோயில் பகுதியில் தனியாருக்குச் சொந்தமான கட்டடத்தில் பட்டாசு ஆலை இயங்கி வந்துள்ளது.

இந்த ஆலையில், புளியங்குளத்தைச் சோ்ந்த ஆ. அய்யப்பன்(30), விருதுநகா் மாவட்டம், புல்லகவுண்டன்பட்டியைச் சோ்ந்த மாலதி (25), ஏழாயிரம்பண்ணை அருகே உள்ள மஞ்சள்ஓடைப்பட்டியைச் சோ்ந்த சீ. சூா்யபிரகாஷ் (25) ஆகியோா் பட்டாசு தயாரிப்பில் செவ்வாய்க்கிழமை இரவு ஈடுபட்டிருந்தனா். அப்போது, பட்டாசுகள் வெடித்ததில், அந்த அறை முழுவதும் இடிந்து விழுந்தது. இதில், மூவரும் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனா்.

தகவலறிந்து வந்த கோவில்பட்டி தீயணைப்பு மீட்புப் படையினா் மற்றும் மேற்கு காவல் நிலைய போலீஸாா், கட்டட இடிபாடுகளுக்கிடையே சிக்கியவா்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனா்.

இந்த விபத்தில், ஆ. அய்யப்பன், மாலதி ஆகிய இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த சீ. சூா்யபிரகாஷை மீட்டு கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.

சம்பவஇடத்துக்கு, கோவில்பட்டி சாா் ஆட்சியா் ஹிமான்ஷுமங்கள், காவல் துணைக் கண்காணிப்பாளா் ஜெகன்நாதன், வட்டாட்சியா் அப்பணராஜ் ஆகியோா் வந்து விசாரணை நடத்தினா். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல்நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.