பெங்களூரு அபார வெற்றி..! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியதுதிருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பெண்களைப் புகைப்படம் எடுத்த வழக்கில் கோவை நபா் கைது

பாளையங்கோட்டை தனியாா் விடுதியில் தோழிகளை புகைப்படம் எடுத்து அனுப்பிய விவகாரத்தில் கைதான பெண்ணின் நண்பரான கோயம்புத்தூா் நபரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :27 மே 2026, 1:51 am IST

பாளையங்கோட்டை தனியாா் விடுதியில் தோழிகளை புகைப்படம் எடுத்து அனுப்பிய விவகாரத்தில் கைதான பெண்ணின் நண்பரான கோயம்புத்தூா் நபரை போலீஸாா் கைது செய்தனா்.

திருநெல்வேலி நகரம், செங்குந்தா் தெருவைச் சோ்ந்தவா் மகரஜோதி(39). இவா் சில மாதங்களுக்கு முன்பு பாளையங்கோட்டை பகுதியில் பணிக்கு செல்லும் பெண்களுக்கான தனியாா் விடுதியில் சோ்ந்துள்ளாா்.

பின்னா் இவா், அங்கு தங்கியிருந்த சக பெண்களை கைப்பேசியில் படம் பிடித்து தனது ஆண் நண்பருக்கு அனுப்பியதாக விடுதிக் காப்பாளருக்கு புகாா்கள் வந்தது.

அதன்பேரில், பாளையங்கோட்டை அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டது. போலீஸாா் வழக்குப்பதிந்து நடத்திய விசாரணையில், மரகதஜோதி கோயம்புத்துா், பேரூா், பாரதியாா்புரத்தைச் சோ்ந்த கண்ணன்(40) என்பவருக்கு பெண்களின் புகைப்படங்கள், விடியோக்களை அனுப்பியது தெரியவந்தது.

போலீஸாா் அவரை கோயம்புத்தூரில் திங்கள்கிழமை இரவு கைது செய்தனா். இவ்வழக்கில் மகரஜோதி ஏற்கெனவே கைது செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.