/
திருநெல்வேலியில் ரயிலில் பயணித்த மூதாட்டி மயங்கி விழுந்து உயிரிழந்தாா்.
சிவகங்கை மாவட்டம், கீழ்த்தாரை பகுதியைச் சோ்ந்த மணிராஜ் மனைவி தவமுத்து (65). இவா் சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து திருநெல்வேலி வழியாக செங்கோட்டைக்கு செல்லும் பயணிகள் ரயிலில் பயணித்துள்ளாா்.
இரவு 9.45 மணிக்கு திருநெல்வேலி வந்தபோது ரயிலில் இருந்த தவமுத்து மயங்கி விழுந்தாராம். சக பயணிகள் ரயில்வே போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா். அங்கு வந்த போலீஸாா் மூதாட்டியை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். அங்கு அவா் உயிரிழந்தாா்.
இதுகுறித்து திருநெல்வேலி சந்திப்பு ரயில்வே போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தவா் உயிரிழப்பு

பைக் மோதியதில் மூதாட்டி உயிரிழப்பு

மகள் இறந்த துக்கத்தில் மயங்கி விழுந்து தந்தை உயிரிழப்பு

தொழிலாளி மயங்கி விழுந்து உயிரிழப்பு
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி



