முதல்வர் கோப்பைக்கான போட்டிகள்:
தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இம்மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.


:தூத்துக்குடி மாவட்டத்தில் முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான போட்டிகள் இம்மாதம் 9-ம் தேதி நடைபெறுகிறது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ்குமார் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகள் ஜனவரி 9-ம் தேதி (புதன்கிழமை) காலை 10 மணி முதல் மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெறுகிறது.
இந்தப் போட்டியில் கலந்து கொள்ள வயது வரம்பு கிடையாது. ஆண்கள், பெண்களுக்கான நீச்சல் போட்டிகள், மேஜைப்பந்து, டென்னிஸ், இறகுப்பந்துப் போட்டிகள் நடைபெறுகிறது.
போட்டிகளில் பங்கேற்பவர்கள் கண்டிப்பாக 5 வருடங்களுக்கு மேல் வசிப்பவர்களாக இருக்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் சிறந்த வீரர், வீராங்கனைகள் மாநில அளவிலான போட்டிகளுக்கு அரசு செலவில் அழைத்துச் செல்லப்படுவார்கள்.
மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெறும் வீரர், வீராங்கனைகளுக்கு தலா ரூ.1 லட்சம், ரூ.75 ஆயிரம் மற்றும் ரூ.25 ஆயிரம் பரிசுத்தொகை வழங்கப்படும்.
எனவே தகுதியுள்ள வீரர், வீராங்கனைகள் ஜனவரி 9-ம் தேதி காலை 10 மணிக்கு தூத்துக்குடி மாவட்ட விளையாட்டு அரங்குக்கு வருகை தருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...