அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

தேசிய சட்டப் பணிகள் தின பேரணி

தூத்துக்குடியில்  தேசிய சட்டப் பணிகள் தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :9 நவம்பர் 2017, 7:17 pm

DIN

தூத்துக்குடியில்  தேசிய சட்டப் பணிகள் தின பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
 ஏழை எளிய மக்களுக்கும் நீதிபெறுவதில் சம வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதன் அடிப்படையில், 1995 ஆம் ஆண்டு நவம்பர் 9 ஆம் தேதி சட்டப்பணிகள் ஆணைய சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதையொட்டி, ஆண்டுதோறும் நவ. 9 ஆம் தேதி தேசிய சட்டப் பணிகள் தினமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி, மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில், தேசிய சட்டப்பணிகள் தின நடைபயண பேரணி தூத்துக்குடியில் நடைபெற்றது. ராஜாஜி பூங்கா முன்பிருந்து தொடங்கிய இப் பேரணியை மாவட்ட முதன்மை நீதிபதி என். ராஜசேகர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் என். வெங்கடேஷ், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பெ. மகேந்திரன், சார்பு நீதிபதி சாமுவேல் பெஞ்சமின் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பேரணியில், பல்வேறு பள்ளிகளைச் சேர்ந்த  மாணவர், மாணவிகள் கலந்து கொண்டனர்.
கோவில்பட்டி: தேசிய சட்டப் பணிகள் தினத்தை முன்னிட்டு கோவில்பட்டி கிளைச் சிறையில் சிறப்பு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
 சார்பு நீதிமன்ற நீதிபதியும்,  வட்ட சட்டப் பணி ஆணைக் குழுத் தலைவருமான பாபுலால் தலைமை வகித்தார்.
 குற்றவியல் நீதிமன்ற எண்:1   நடுவர் ஜெயசுதாகர், வழக்குரைஞர் ஸ்ரீரமணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். முகாமில், கிளைச் சிறையில் விசாரணைக் கைதிகளாக உள்ள 25  பேர் கலந்துகொண்டனர். கைதிகளுக்கு சட்ட உதவி மையம் மூலம் கிடைக்கக் கூடிய உதவிகள் குறித்து தெரிவிக்கப்பட்டது. சட்டப் பணிகள் ஆணைக் குழுவின் செயல்பாடுகள் குறித்து வழக்குரைஞர்கள் சந்திரசேகர், முத்துராமலிங்கம், ரவி, கனிராஜ் ஆகியோர் பேசினர்.
வழக்குரைஞர் சந்திரசேகர் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். சிறைக் கண்காணிப்பாளர் முகம்மதுஆசிப் வரவேற்றார். ஏற்பாடுகளை சட்ட உதவி மையச் செயலர் தாமரைச்செல்வன் செய்திருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.