சாத்தான்குளம் அருகே உள்ள மீரான்குளம் தூ. நா. தி.அ.க. நடுநிலைப் பள்ளியில் டெங்கு நோய் தடுப்பு விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
பள்ளித் தலைமை ஆசிரியர் ராஜ்குமார் தலைமை வகித்தார். ஆழ்வார்திருநகரி ஒன்றிய ஆணையர் பாண்டியராஜ், முன்னிலை வகித்தார். ஆசிரியர் கெத்சியாள் வரவேற்றார். மருத்துவ அலுவலர் கோமதிநயினார், சுகாதார ஆய்வாளர் ஆகியோர் பேசினர். இதில், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுடலை, ஆசிரியர்கள் செல்வராணி, பொன்சீலிலி, சாந்தமலர், மெல்பா, அமலா தயாமணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். பள்ளி உடற்கல்வி ஆசிரியர் பிராங்கிளின் பீட்டர் நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.