வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

தூத்துக்குடியில் திருநங்கைகளுக்கான கருத்தரங்கு

தூத்துக்குடியில் மாவட்ட  நீதிமன்றத்தில் இயங்கிவரும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், திருநங்கைகள் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.

News image
Updated On :20 அக்டோபர் 2017, 11:40 pm

DIN

தூத்துக்குடியில் மாவட்ட  நீதிமன்றத்தில் இயங்கிவரும் சட்டப் பணிகள் ஆணைக் குழு சார்பில், திருநங்கைகள் பிரச்னைகள் குறித்த கருத்தரங்கு நடைபெற்றது.
மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுச் செயலரான சார்பு நீதிபதி சு. சாமுவேல் பெஞ்சமின் தலைமை வகித்தார். மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர் கந்தசாமி,  மாவட்ட சமூக நலத்துறை அலுவலர் ஜெயசூரியா, மாவட்ட குற்றவியல் தலைமை வழக்குரைஞர் சந்திரசேகர், மூத்த வழக்குரைஞர் சாமுவேல் ராஜேந்திரன் ஆகியோர் பல்வேறு தலைப்புகளில் பேசினர்.
திருநங்கைகளுக்குரிய சமூகப் பிரச்னை, வேலைவாய்ப்பு பிரச்னை, அவற்றுக்கான தீர்வுகள் குறித்தும், திருநங்கைகள் குடும்ப அட்டை,  வாக்காளர் அடையாள அட்டை, இலவச வீட்டு மனைப் பட்டா பெறுவது குறித்தும், தொழில் பயிற்சி வகுப்புகள் நடத்துவது குறித்தும் விவாதிக்கப்பட்டது.
கருத்தரங்கில் கலந்துகொண்ட திருநங்கைகள் தாங்கள் சந்திக்கும் பிரச்னை குறித்து தனித்தனியே எடுத்துக் கூறினர். அதற்கான உரிய பதில்கள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.