/

கோவில்பட்டியில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

தலித் மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைப்பதாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

Updated On :5 ஏப்ரல் 2018, 8:41 am IST

தலித் மக்கள் மீதான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தை சீர்குலைப்பதாகக் கூறி, மத்திய அரசைக் கண்டித்து கோவில்பட்டியில் புதன்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பயணியர் விடுதி முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி. துறைத் தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். 
முன்னாள் எம்.எல்.ஏ. சுடலையாண்டி சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசினார். 
ஆர்ப்பாட்டத்தில்,  மாவட்டத் துணைத் தலைவர் திருப்பதிராஜா,  மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள் உமாசங்கர், பிரேம்குமார், காங்கிரஸ் நிர்வாகிகள் அருண்பாண்டியன்,  சின்னப்பன்,  முத்து,  குணசேகர்,  பிச்சைக்கனி, ஜெகதீசன்,  கார்த்திக் காமராஜ்,  நல்லமதி,  பான்மதி,  தங்கபுஷ்பம்,  மாரியம்மாள்,  தங்கமாரியப்பன்,  அய்யலுசாமி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.