ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் ஏப்.14 ஆம் தேதி தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு, உணவுத் திருவிழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதற்கான இடத்தை மாவட்ட ஆட்சியர் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தார். ஸ்ரீவைகுண்டம் மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட பகுதிகளிலும், ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியிலும் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் வெங்கடேஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஸ்ரீவைகுண்டம் அணைப் பகுதியில் படகு குழாம் அமைப்பதற்கான பணிகள் விரைந்து நடைபெற்று வருகிறது. முதற்கட்டமாக படகு சென்று வர வேண்டிய தொலைவு, அப்பகுதியில் தண்ணீர் இருப்பு, பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் ஆய்வு நடைபெறும். அதைத் தொடர்ந்து, பேரூராட்சி நிர்வாகத்தினரின் கட்டுப்பாட்டில் படகுகுழாம் செயல்படுத்தப்படும். மேலும், ஏப்.14ஆம் தேதி அணையின் கீழ்பகுதியில் உணவுத் திருவிழா நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.
ஆய்வின் போது, சார் ஆட்சியர்(பயிற்சி) லாவான்யா, வட்டாட்சியர் தாமஸ் பயஸ் அருள், சமூக நலப் பாதுகாப்பு திட்ட வட்டாட்சியர் செல்வபிரசாத், பேரூராட்சி செயல் அலுவலர்(பொ) மணிமொழியன் ரெங்கசாமி, சுகாதார ஆய்வாளர் தியாகராஜன் உள்பட பலர் உடன் சென்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.






