தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்துக்கு கடந்த 3ஆம் தேதி வந்த எம்.வி மேரே கிளோவிடா என்ற கப்பலில் இருந்து 14,800 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டது. இதுவே, ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்ட சாதனை ஆகும்.
இதற்கு முன்பு, கடந்த மாதம் 6 ஆம் தேதி எம்.வி. கிளப்பர் லிஸ் என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 10,748 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. கடந்த நிதியாண்டு வஉசி துறைமுகம் 1,38,969 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாண்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் இதுவரை 23,953 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டுள்ளது.
வஉசி துறைமுகத்தில் இறக்குமதியாகும் மாட்டுத் தீவனமானது கோழி மற்றும் கால்நடைப் பண்ணைகளுக்கும் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் மாட்டுத் தீவனம் உக்ரைன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திடீரென பெய்த ஆலங்கட்டி மழை: விவசாயிகள்,மக்கள் மகிழ்ச்சி!

மு.க. ஸ்டாலின்தான் மீண்டும் முதல்வர்: செல்வப்பெருந்தகை

ம.பி. படகு விபத்து! தாய் - மகன் கட்டிப்பிடித்தபடி உடல்கள் மீட்பு! கலங்கும் உறவுகள்

செயின்ட் ஜார்ஜ் கோட்டையில் எடப்பாடியார் ஆட்சி அமைப்பார்: கடம்பூர் ராஜு
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

