ஈஸ்டர் போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி உக்ரைன் தாக்குதல்: ரஷியா குற்றச்சாட்டுபாகிஸ்தானுக்கு நிதி நெருக்கடி: 500 கோடி டாலர் வழங்கும் சௌதி, கத்தார்! புதுப்பொலிவுடன் தேர்தலைச் சந்திக்கிறது அதிமுக: எடப்பாடி பழனிசாமி செயற்கை நுண்ணறிவு தலைநகரமாக தமிழ்நாடு மாறும் : விஜய்ஈரான் - அமெரிக்கா இடையே மத்தியஸ்தம் தொடரும்: பாகிஸ்தான்காரைக்கால் மீனவர்கள் 12 பேர் இலங்கை கடற்படையால் கைதுதவெகவில் கருப்பு ஆடு: ஆதவ் அர்ஜுனா விமர்சனம்!ஜூன் 3 முதல் அமர்நாத் யாத்திரை தொடக்கம்!பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!
/

ஒரே நாளில் 14,800 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு வஉசி துறைமுகம் புதிய சாதனை

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:02 am

தூத்துக்குடி வஉசி துறைமுகம் ஒரே நாளில் 14 ஆயிரத்து 800 மெட்ரிக் டன் சரக்குகளை கையாண்டு புதிய சாதனை படைத்தது.
தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்துக்கு கடந்த 3ஆம் தேதி வந்த எம்.வி மேரே கிளோவிடா என்ற கப்பலில் இருந்து 14,800 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டது. இதுவே, ஒரே நாளில் அதிக சரக்குகளை கையாண்ட சாதனை ஆகும்.
இதற்கு முன்பு, கடந்த மாதம் 6 ஆம் தேதி எம்.வி. கிளப்பர் லிஸ் என்ற கப்பலில் இருந்து ஒரே நாளில் 10,748 மெட்ரிக் டன் சரக்குகள் கையாளப்பட்டது சாதனையாக இருந்து வந்தது. கடந்த நிதியாண்டு வஉசி துறைமுகம் 1,38,969 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாண்டுள்ளது. நிகழ் நிதியாண்டில் இதுவரை 23,953 மெட்ரிக் டன் மாட்டுத் தீவனம் கையாளப்பட்டுள்ளது.
வஉசி துறைமுகத்தில் இறக்குமதியாகும் மாட்டுத் தீவனமானது கோழி மற்றும் கால்நடைப் பண்ணைகளுக்கும் மற்றும் எண்ணெய் பிரித்தெடுக்கும் தொழிற்சாலைகளிலும் பயன்படுத்தப்படுகிறது.
பெரும்பாலும் மாட்டுத் தீவனம் உக்ரைன் நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படுகிறது என வஉசி துறைமுக பொறுப்புக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.