சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

திருச்செந்தூர் பகுதியில் வீடு, கடையில் திருட்டு

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர். அதே போல கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

News image
Updated On :5 பிப்ரவரி 2018, 3:02 am

DIN

திருச்செந்தூர் அருகே வீடு புகுந்து மர்ம நபர்கள் 2 பவுன் தங்க நகையை திருடிச் சென்றனர். அதே போல கடையின் ஷட்டரை உடைத்து பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.
வீரபாண்டியன்பட்டணம், ராஜ்கண்ணா நகரைச் சேர்ந்தவர் சண்முகசுந்தரம் மகன் ரகு (47). அரசுப் போக்குவரத்து கழகத்தில் நடத்துநராகப் பணியாற்றி வருகிறார். இவர் தனது மனைவியுடன் செங்கோட்டையில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று விட்டு ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் வீடு திரும்பினாராம். 
அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு, உள்ளே பீரோவிலிருந்த 2 பவுன் நகை திருடுபோனது தெரியவந்தது. தகவலறிந்த காவல் ஆய்வாளர் ஷீஜாராணி சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்டு, வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றார்.
இதேபோல, திருச்செந்தூர் வடக்குரத வீதியில், தனியாருக்குச் சொந்தமான ஜவுளிக்கடையின் ஷட்டர் ஞாயிற்றுக்கிழமை காலையில் உடைக்கப்பட்டது தெரியவந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, பெட்டியிலிருந்து ரூ. 2500-ஐ மர்மநபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுகுறித்தும் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.