திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நேஷனல் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 30ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 

News image
Updated On :9 ஜூலை 2018, 2:07 am

DIN

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியின் 30ஆவது பட்டமளிப்பு விழா கல்லூரி கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தலைவர் கே. ராமசாமி, தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் செ. ராஜு ஆகியோர் தலைமை வகித்தனர். கே.ஆர். கல்வி நிறுவனங்களின் தாளாளர் சென்னம்மாள் ராமசாமி, கல்லூரிச் செயலர் சங்கரநாராயணன், கே.ஆர். கல்வி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் கே.ஆர். அருணாசலம், கல்லூரி இயக்குநர் சொக்கலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் சண்முகவேல் வரவேற்றார். 
தொடர்ந்து, சென்னை அண்ணா பல்கலைக் கழகப் பதிவாளர் எஸ். கணேசன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசியதாவது: பட்டதாரிகள் தங்களின் தொழில்நுட்பத்திறன், மேலாண்மைத் திறன், தலைமைப் பண்பு, ஒழுக்கம் மற்றும் வெளிப்படைத் தன்மை ஆகியவற்றை தங்கள் வாழ்வின் அனைத்து நிலைகளிலும் பின்பற்ற வேண்டும். நாட்டின் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் பட்டதாரிகளின் பங்கு முக்கியமானது என்றார். 
தொடர்ந்து, 524  மாணவ, மாணவிகளுக்கு இளங்கலைப் பட்டங்களையும், 46 மாணவ, மாணவிகளுக்கு முதுகலைப் பட்டங்களையும், 8 பேருக்கு முனைவர் பட்டங்களையும் சிறப்பு விருந்தினர் வழங்கினார். 
விழாவில் பட்டம் பெற்றவர்களில் 35 இளங்கலை மாணவர்கள் மற்றும் 4  முதுகலை மாணவர்கள் தன்னாட்சி தரப்பட்டியலில் இடம்பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 
ஏற்பாடுகளை விழா ஒருங்கிணைப்பாளர் கோமதி தலைமையில், அனைத்துத் துறை தலைவர்கள், கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.