கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சியில் வீட்டுத் தீர்வை ரசீதை போலியாக தயாரித்து விநியோகித்தவரை போலீஸார் கைது செய்தனர்.
கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியத்திற்கு உள்பட்ட மந்தித்தோப்பு ஊராட்சி செயலராக பணியாற்றி வருபவர் முத்தையா மகன் பாலகுமார்(38). இவர் தங்கள் ஊராட்சி மன்றத்திற்கு உள்பட்ட பகுதிகளில் புதிதாக கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு போலியாக வீட்டுத் தீர்வை ரசீதை இனாம்மணியாச்சி நியூ காலனியைச் சேர்ந்த சுப்பையா மகன் காளிமுத்து(41) என்பவர் விநியோகித்துள்ளார் என்றும், கடந்த ஒரு ஆண்டாக இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார் என்பது குறித்து மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இது குறித்து, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு காளிமுத்துவை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.








