ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிற்றுந்து கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி முற்றுகை

கோவில்பட்டியில் இயங்கி வரும் சிற்றுந்துகளின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் மற்றும் பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 

News image
Updated On :1 மார்ச் 2018, 2:06 am

DIN

கோவில்பட்டியில் இயங்கி வரும் சிற்றுந்துகளின் கட்டணத்தை குறைக்க வலியுறுத்தி, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தை தொழிற்சங்கத்தினர் மற்றும் பெண்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனர். 
கோவில்பட்டி வட்டத்துக்கு உள்பட்ட இலுப்பையூரணி, கூசாலிபட்டி உள்ளிட்ட பகுதிகளில் இயக்கப்பட்டு வரும் சிற்றுந்துகள் கூடுதல் கட்டணம் வசூலித்து வருவதாகவும், பயணச் சீட்டை முறையாக வழங்குவதில்லை எனவும் கூறி,  
சிற்றுந்துகள் கட்டணத்தை அரசு விதிகளின்படி வசூலிக்க வலியுறுத்தி, அண்ணா தொழிற்சங்கத்தைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் தலைமையில்,  ஐ.என்.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்ட பொதுச்செயலர் ராஜசேகரன்,  துணைத் தலைவர் மகேந்திரன், தொழிலாளர் முன்னேற்ற சங்க மாவட்டத் தலைவர் விஜயபாண்டியன், ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்க மாவட்டச் செயலர் தமிழரசன்,  அகில இந்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்புக் குழு கமிட்டி மாவட்டப் பொறுப்பாளர் பொன்ராஜ் மற்றும் இலுப்பையூரணி கிராம பெண்கள்,  வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் முன் திரண்டனர். 
பின்னர், கோரிக்கைகளை வலியுறுத்தி வட்டாரப் போக்குவரத்து அலுவலரின் நேர்முக உதவியாளர் சக்திவேலிடம்  மனு அளித்துவிட்டு போராட்டக் குழுவினர் கலைந்து சென்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.