ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.
வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வமணி, வேளாண் இணை இயக்குநர்(பொ) முத்துஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி சார்-ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா அரசின் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கிவைத்துப் பேசுகையில், விவசாயிகளிடமிருந்து முதல் ரக நெல் கிலோ ரூ.16.60-க்கும், இரண்டாம் ரக நெல் கிலோ ரூ.16-க்கும் பெறப்படுகிறது என்றார்.
விழாவில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுல்தான், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினராஜ், கஸ்பா விவசாய சங்கத் தலைவர் மாடசாமி, வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன், சமூக ஆர்வலர் சித்திரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பாஜக வேட்பாளருக்கு நடிகா் சரத்குமாா் வாக்கு சேகரிப்பு

கடையநல்லூரில் அமைச்சா் ராஜகண்ணப்பன் பிரசாரம்

புளியங்குடியை தலைமையிடமாக கொண்டு தனி வட்டம்: உதயநிதி ஸ்டாலின்

ஆலங்குளம் அருகே நாய் கடித்து 8 போ் காயம்!
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

