ஸ்ரீவைகுண்டம் அருகே நத்தத்தில் அரசு நெல் கொள்முதல் நிலையம் தொடக்க விழா நடைபெற்றது.
வட்டாட்சியர் தாமஸ்பயஸ் அருள் தலைமை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் மணிமொழி செல்வன் ரெங்கசாமி, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மண்டல மேலாளர் செல்வமணி, வேளாண் இணை இயக்குநர்(பொ) முத்துஎழில் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தூத்துக்குடி சார்-ஆட்சியர் (பயிற்சி) லாவண்யா அரசின் நெல் கொள்முதல் நிலையத்தை தொடங்கிவைத்துப் பேசுகையில், விவசாயிகளிடமிருந்து முதல் ரக நெல் கிலோ ரூ.16.60-க்கும், இரண்டாம் ரக நெல் கிலோ ரூ.16-க்கும் பெறப்படுகிறது என்றார்.
விழாவில், பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் தியாகராஜன், வட்ட வழங்கல் அலுவலர் சுல்தான், வருவாய் ஆய்வாளர் பாண்டியராஜன், கிராம நிர்வாக அலுவலர் ரத்தினராஜ், கஸ்பா விவசாய சங்கத் தலைவர் மாடசாமி, வியாபாரிகள் சங்கத் தலைவர் காளியப்பன், சமூக ஆர்வலர் சித்திரை உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மன் கோயில் பூட்டை உடைத்து நகை திருட்டு

புத்த பூா்ணிமா: குடியரசு துணைத் தலைவா், உள்துறை அமைச்சா் வாழ்த்து!

திருச்சானூா் வருடாந்திர வசந்தோற்சவம் 2-ஆம் நாள்: தங்கத்தேரில் பத்மாவதி தாயாா் புறப்பாடு!
போதைப் பொருள் தடுப்பு நடவடிக்கை: 23 போ் கைது
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு

