தூத்துக்குடியில் முற்றுகைப் போராட்டம்: இளைஞர் பெருமன்றத்தினர் 100 பேர் கைது
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைந்திந்திய


தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி திங்கள்கிழமை ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட அனைந்திந்திய இளைஞர் பெருமன்றத்தைச் சேர்ந்த 100 பேரை போலீஸார் கைது செய்தனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும், காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும், நியூட்ரினோ, மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி, அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தினர் மாவட்டச் செயலர் சந்தனசேகர் தலைமையில் தூத்துக்குடி ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட திங்கள்கிழமை திரண்டனர்.
ஆட்சியர் அலுவலகம் முன்பிருந்து பேரணியாகச் சென்றவர்களை போலீஸார் தடுப்பு வேலி அமைத்து தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்ற அவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி 100 பேரை கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...