அமைச்சர் நிர்மலின் சர்ச்சைக்குரிய பேச்சு நீக்கம்முதல்வர் விஜய்யின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்!மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்: மத்திய அமைச்சா் அதவாலே தகவல்எழும்பூா் ரயில் நிலைய மறுசீரமைப்பு: ரயில் சேவைகளில் மாற்றம்ஈரான் நிபந்தனையின்றி சரணடைய வேண்டும்: டிரம்ப் எச்சரிக்கைதேர்வுகள் ரத்து! மாணவர்கள் கோரிக்கையை ஏற்ற ஜார்க்கண்ட் அரசு!
/

தூத்துக்குடியில் மாவட்ட ஸ்கேட்டிங் போட்டி

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி மற்றும் மாநில போட்டிக்கான தகுதி தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Updated On :30 ஜனவரி 2024, 10:12 pm IST

தூத்துக்குடியில் அண்மையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஸ்கேட்டிங் போட்டி மற்றும் மாநில போட்டிக்கான தகுதி தேர்வில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.
 தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் கழகமும், தூத்துக்குடி மாவட்ட ஸ்பீடு ஸ்கேட்டிங் கழகமும் இணைந்து நடத்திய இப்போட்டியில்,  தூத்துக்குடி, கோவில்பட்டி, விளாத்திக்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். 5 வயது முதல் 16 வயது வரை தனித்தனியே போட்டிகள் நடத்தப்பட்டன.
 போட்டியில் வென்றோருக்கு பியர்ல்ஸ் ஹெல்பிங்க் ஹேண்ட்ஸ் அமைப்பு நிர்வாகியான தொழிலதிபர் முகமது இப்ராகிம், ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அப்துல் அலீம், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் கழகச் செயலர் முருகானந்தம் ஆகியோர் பரிசுகளையும், சான்றிதழ்களையும் வழங்கினர்.
 நிகழ்ச்சியில், ஸ்பீடு ஸ்கேட்டிங் கழக தூத்துக்குடி மாவட்டத் தலைவர் ஷாநவாஸ், செயலர் முபாரக், தமிழ்நாடு ஸ்பீடு ஸ்கேட்டிங் கழக நடுவர் குழுச் செயலர் கெளதம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.