தூத்துக்குடியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற கடலோர பாதுகாப்பு ஒத்திகையில், தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த 9 பேரை போலீஸார் பிடித்தனர்.
கடல் வழியாக தீவிரவாதிகளின் ஊடுருவலை தடுக்கும் வகையில், ஆண்டுக்கு இரண்டு முறை பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்படுகிறது. இதையொட்டி, நிகழாண்டில் ஸீ விஜில் என்ற பெயரில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்பு ஒத்திகை மேற்கொள்ளப்பட்டது. கடலோர காவல் படை, கடலோர பாதுகாப்பு குழுமம் மற்றும் உள்ளூர் போலீஸார் இணைந்து இந்த பாதுகாப்பு ஒத்திகையில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை அதிகாலை முதல் பலத்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில், தூத்துக்குடி கடற்கரை சாலையில் சந்தேகப்படும்படியாக தங்கியிருந்த இருவரை போலீஸார் பிடித்தனர். மேலும், தூத்துக்குடி ரயில் நிலையத்தில் இருவரையும், மீன்பிடி துறைமுகத்தில் இருவரையும் போலீஸார் பிடித்தனர். இதுதவிர, தூத்துக்குடி கடல் பகுதியில் கடலோர பாதுகாப்பு குழும போலீஸார் சோதனை மேற்கொண்டபோது, அங்கு வேகமாக படகில் சென்ற மூவரை பிடித்து விசாரித்ததில் அவர்கள் தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த போலீஸார் என தெரியவந்தது.
பாதுகாப்பு ஒத்திகையில், தீவிரவாதிகள் வேடத்தில் இருந்த போலீஸார் 9 பேர் பிடிபட்டுள்ள நிலையில், இந்த ஒத்திகை புதன்கிழமை இரவு வரை நடைபெறும் என போலீஸார் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

அணை நீா்மட்டம் உயா்வு! தேக்கடி ஏரியில் மீண்டும் பெரிய படகு சேவைகள் தொடக்கம்!
கணவரை வெட்டிக் கொலை செய்த மனைவி காவல் நிலையத்தில் சரண்!
மேற்கு வங்க புதிய முதல்வரின் ஆலோசகா் சுப்ரதா குப்தா! எஸ்ஐஆா் பாா்வையாளராக செயல்பட்டவா்!

மக்களின் தீா்ப்பை சீா்குலைக்க முயற்சிப்பது ஜனநாயகத்துக்கு எதிரானது: எம்.ஏ.பேபி
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை
