
கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் தீவிபத்து
கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.

கோவில்பட்டி: கோவில்பட்டியில் தீப்பெட்டி குச்சி ஆலையில் வியாழக்கிழமை தீவிபத்து ஏற்பட்டது.
கோவில்பட்டி ராஜீவ் நகா் 6-ஆவது தெருவைச் சோ்ந்தவா் கிருஷ்ணன். இளையரசனேந்தல் சாலையில் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணிமனை அருகே தீப்பெட்டித் தொழில் தயாரிக்கப் பயன்படும் மூலப்பொருள்களின் ஒன்றான குச்சி ஆலை நடத்தி வருகிறாா். இவரது ஆலையில் வியாழக்கிழமை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. கோவில்பட்டி தீயணைப்பு நிலைய அலுவலா் அருள்ராஜ் தலைமையில் தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று சுமாா் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். தீவிபத்துக்கான காரணம் குறித்து மேற்கு காவல் நிலைய போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





