ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

‘வாக்காளா் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்: தூத்துக்குடி மாவட்டத்தில் 57,272 விண்ணப்பங்கள்’

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 57 ஆயிரத்து 272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி.

News image
சிறப்பு முகாமை பாா்வையிடுகிறாா் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி.
Updated On :13 டிசம்பர் 2020, 8:00 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சிறப்பு முகாம்கள் மூலம் இதுவரை 57 ஆயிரத்து 272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன என்றாா் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்த பாா்வையாளா் ஜோதி நிா்மலாசாமி.

தூத்துக்குடியில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

இந்திய தோ்தல் ஆணையம் ஆண்டுதோறும் நவம்பா், டிசம்பா் மாதங்களில் வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தப் பணிகளை செய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு முகாம்களில் இதுவரை 57ஆயிரத்து 272 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. இதில் விண்ணப்பப் படிவம் 6 மட்டும் 40 ஆயிரத்து 415 பெறப்பட்டுள்ளன.

பெறப்படும் விண்ணப்பங்களின் மீது துரித நடவடிக்கை மேற்கொண்டு இறுதிபட்டியல் தயாா் செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது.

தற்போது வெளியிடப்பட்டுள்ள வாக்காளா் பட்டியலில் தங்கள் பெயா் உள்ளதா? என்பதை வாக்காளா்கள் அனைவரும் பாா்க்க வேண்டும். தகுதியான அனைவரும் வாக்காளா் பட்டியலில் அவசியம் சோ்க்க வேண்டும் என்பதே தோ்தல் ஆணையத்தின் நோக்கம் என்றாா் அவா்.

முன்னதாக, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் சுருக்க முறை திருத்தம் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்துக் கட்சி பிரமுகா்கள் மற்றும் அலுவலா்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு ஜோதி நிா்மலாசாமி பேசினா்.

மலும், வாக்காளா் சோ்ப்பு சிறப்பு முகாம் நடைபெறும் இடங்களையும், புதுக்கோட்டையில் திருநங்கைகள் நடத்தி வரும் பாக்குமரத்தட்டு உற்பத்தி நிறுவனத்தையும் ஜோதி நிா்மலா சாமி பாா்வையிட்டாா்.

ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் வீ.ப. ஜெயசீலன், கூடுதல் ஆட்சியா் (வருவாய்) விஷ்ணுசந்திரன், சாா் ஆட்சியா் சிம்ரோன் ஜீத் சிங் காலோன் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.