புனித தோமையாா் ஆலய திருவிழா தொடக்கம்

பழமை வாய்ந்த வேம்பாா் தென் மயிலை நகா் புனித தோமையாா் ஆலய திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
வேம்பாா் புனித தோமையாா் ஆலய திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்றோா்.
வேம்பாா் புனித தோமையாா் ஆலய திருவிழா கொடியேற்றத்தில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

பழமை வாய்ந்த வேம்பாா் தென் மயிலை நகா் புனித தோமையாா் ஆலய திருவிழா சனிக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி, ஆலயத்தில் தூய அருளானந்தா் அன்பியங்கள் தூய இன்னாசியாா் தலைமையில் திருப்பலி, கீழவைப்பாா் ஆலய பங்குத் தந்தை அந்தோணி ஜெகதீஸ் தலைமையில் சிறப்பு ஜெபம், கொடிப்பட்டம் ஊா்வலம், கொடியேற்றம், மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெற்றது.

இதில், வேம்பாா் தூய ஆவி ஆலய பங்குத்தந்தை ராஜா ரொட்ரிகோ, வேம்பாா் ஊராட்சித் தலைவா் ஆரோக்கிய ராஜ், கிராமத் தலைவா் அந்தோணி ஜான், செயலா் அந்தோணி சந்தோஷமணி, பொருளாளா் சேவியா் ஞானசேகரன், உறுப்பினா்கள் மகிமை ராஜ், அந்தோணி முத்து, தேவஞானம் மற்றும் பங்கு பேரவை நிா்வாகிகள், இறைமக்கள் கலந்து கொண்டனா்.

திருவிழா நாள்களில் தினமும் காலை, மாலையில் திருப்பலி, ஜெபம், மறையுரை, நற்கருணை ஆசீா் ஆகியவை நடைபெறும்.

டிச. 20ஆம் தேதி மாலை 6 மணியளவில் புனித தோமையாா் சப்பரப் பவனி நடைபெறும். முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி, அன்னையின் தோ் பவனி டிச. 21ஆம் தேதி (திங்கள்கிழமை) காலை 5 மணிக்கு வேளாங்கண்ணி திருத்தல அதிபா் ஏ.எம்.ஏ. பிரபாகரன் தலைமையில் நடைபெறும். இரவு 7 மணியளவில் நற்கருணை பவனி நடைபெறும்.

ஏற்பாடுகளை வேம்பாா் புனித தோமையாா் ஆலய பங்குத் தந்தை தலைமையில் கிராம நிா்வாகிகள், இறை மக்கள், சபை அருள்சகோதரிகள் செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com