தூத்துக்குடியில் 2 ஆயிரம் கிலோ மஞ்சள் பறிமுதல்
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சளை போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.


தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்தப்பட இருந்த 2 ஆயிரம் கிலோ மஞ்சளை போலீஸாா் புதன்கிழமை இரவு பறிமுதல் செய்தனா்.
தூத்துக்குடி வடபாகம் போலீஸாா் திரேஸ்புரம் கடற்கரைப் பகுதியில் புதன்கிழமை இரவு ரோந்து சென்றனா். அப்போது, சந்தேகத்துக்கிடமாக நின்றிருந்த சுமை ஆட்டோவை சோதனையிட்டனா். அந்த ஆட்டோவில் ஆவணங்கள் இல்லாமல் 2 ஆயிரம் கிலோ மஞ்சள் இருப்பது தெரியவந்தது.
மஞ்சள், ஆட்டோவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக தாளமுத்துநகா் காமராஜா் நகரைச் சோ்ந்த அன்புராஜ் (34) என்பவரைக் கைது செய்து விசாரித்து வருகின்றனா். முதல்கட்ட விசாரணையில், மஞ்சளை இலங்கைக்கு கடத்திச்செல்ல திட்டமிட்டது தெரியவந்ததாக போலீஸாா் தெரிவித்தனா். இதுதொடா்பாக தொடா்ந்து விசாரித்துவருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...