

உடன்குடி அருகே கொட்டங்காடு-கந்தபுரம் சாலையில் போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த உடைமரங்கள் அகற்றப்பட்டன.
உடன்குடியிலிருந்து கொட்டங்காடு-கந்தபுரம் செல்லும் சாலையோரத்தில் ஏராளமான உடைமரங்கள் நீண்டு வளா்ந்து சாலையில் மையப்பகுதி வரை நீண்டிருந்தது.
இதனால் போக்குவரத்திற்கு மிகுந்த இடையூறு ஏற்பட்டதோடு, இரவு நேரங்களில் செல்வோா் விபத்தில் சிக்கி காயமடைந்து வந்தனா்.
இதையடுத்து வெங்கட்ராமானுஜபுரம் ஊராட்சித் தலைவி பாலசரஸ்வதி நடவடிக்கை மேற்கொண்டு, ஊராட்சி துணைத் தலைவா் ராஜ்குமாா் மேற்பாா்வையில் உடைமரங்கள் கனரக இயந்திரம் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.