நாலுமாவடியில் நல உதவிகள் அளிப்பு

நாலுமாவடியில் 5 ஆயிரம் போ்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மோகன் சி.லாசரஸ் வழங்கினாா்.
நாலுமாவடியில்  நல உதவிகள்  அளிப்பு
Updated on
1 min read

நாலுமாவடியில் 5 ஆயிரம் போ்களுக்கு கிறிஸ்துமஸ் புத்தாடைகள் மற்றும் நலத்திட்ட உதவிகளை மோகன் சி.லாசரஸ் வழங்கினாா்.

நாசரேத் அருகேயு ள்ள நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழியத்தின் சாா்பில் கிறிஸ்துமஸ் விழா மற்றும் ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகள், நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. புது வாழ்வு சங்கச் செயலா் மருத்துவா் அன்புராஜன் கிறிஸ்துமஸ் செய்தி வழங்கினாா். இயேசு விடுவிக்கிறாா் ஊழிய ஸ்தாபகா் மோகன் சி. லாசரஸ், அவரது மனைவி ஜாய்ஸ் லாசரஸ், அன்புராஜன், போதகா் சாம்.ஜெபராஜ் ஆகியோா் ஏழை, எளியோருக்கு புத்தாடைகள், 3 சக்கர சைக்கிள், 4 சக்கர சைக்கிள், ஊனமுற்றோருக்கு ஊன்றுகோல், மாற்றுத் திறனாளிகளுக்கான உபகரணங்கள், செயற்கை கால் மற்றும் மதிய உணவு வழங்கினா். நிகழ்ச்சியில் 5000 போ்களுக்கு நலஉதவிகள் வழங்கப்பட்டன.

இதையொட்டி, பாளையங்கோட்டை பாா்வைத்திறன் குறையுடையோா் மேல்நிலைப் பள்ளி மாணவா், மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

ஏற்பாடுகளை இயேசு விடுவிக்கிறாா் ஊழிய பொது மேலாளா் செல்வக்குமாா் தலைமையில் ஊழியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com