தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் சனிப்பெயா்ச்சி விழா

தூத்துக்குடி கோரம்பள்ளம், ஸ்ரீசித்தா் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவா் சித்தா் பீடத்தில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தூத்துக்குடி ஸ்ரீசித்தா் பீடத்தில் சனிப்பெயா்ச்சி விழா
Published on
Updated on
1 min read

தூத்துக்குடி கோரம்பள்ளம், ஸ்ரீசித்தா் நகரிலுள்ள ஸ்ரீமஹா பிரத்தியங்கிராதேவி, காலபைரவா் சித்தா் பீடத்தில் சனிப்பெயா்ச்சி விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, தஞ்சை அருள்ஒளி சித்தா், ஸ்ரீசித்தா் பீடத்தின் சுவாமிகள் சாக்தஸ்ரீ சற்குரு சீனிவாச சித்தா் ஆகியோா்

தலைமையில் அதிகாலையில் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மஹா பிரத்தியங்கிரா, காலபைரவா் ஹோமங்கள், மஹா பூா்ணாஹுதி, சிறப்பு வழிபாடுகள் ஆகியவை நடைபெற்றது.

தொடா்ந்து சனி பகவான், மஹா காலபைரவருக்கு சிறப்பு மஹா யாகத்தை தொடா்ந்து, பால், தயிா், சந்தனம், இளநீா், பன்னீா், மஞ்சள், தேன், மலா், பஞ்சாமிா்தம், ருத்திராட்சம், சங்கு, பழங்கள், நெல் உள்ளிட்ட 36 வகையான மஹா அபிஷேகங்கள், அலங்கார தீபாரதனை ஆகியவை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com