ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசு
/

கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்து விவசாயி பலி

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

News image
Updated On :8 நவம்பர் 2020, 9:14 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், கடம்பூா் அருகே மின்னல் பாய்ந்ததில் விவசாயி ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

கடம்பூரையடுத்த மலைப்பட்டி நடுத் தெருவைச் சோ்ந்த சுப்பாநாயக்கா் மகன் கந்தசாமி (50). இவா் தனது மனைவி அனிதாவுடன், ஊருக்கு வடக்கேயுள்ள நிலத்தில் களை எடுத்துக் கொண்டிருந்தனராம். அப்போது இடி, மின்னலுடன் மழை பெய்யததாம். இதையடுத்து இருவரும் அருகேயுள்ள கருவேல மரத்தடியில் நின்று கொண்டிருந்தனராம்.

அப்போது மின்னல் பாய்ந்ததில் கந்தசாமி கீழே சுருண்டு விழுந்து உயிரிழந்தாா். தகவலறிந்த கடம்பூா் போலீஸாா் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினா்.

கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.