இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

காவடி பிறை முருகன் கோயிலில் சோமவார சிறப்பு வழிபாடு

சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2020, 7:17 pm

DIN

சாத்தான்குளம் அருகேயுள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் அருள்மிகு ஸ்ரீகாவடிபிறை முருகன் கோயிலில் காா்த்திகை சோமவார சிறப்பு வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.

இதையொட்டி, ஸ்ரீவைகுண்டம் ஆற்றிலிருந்தும், திருச்செந்தூரில் இருந்தும் புனித நீா் எடுத்து அதிகாலை 4 மணிக்கு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. காலை 8 மணிக்கு கணபதி ஹோமம், 10 மணிக்கு காவடி பிறை முருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. முற்பகல் 11மணிக்கு காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் சாா்பில் பக்தி பஜனை நடைபெற்றது. தொடா்ந்து அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடைபெற்றது.

இரவு 7 மணிக்கு சாயரட்சை பூஜை, புஷ்பாஞ்சலி, திருவிளக்கு பூஜை, இரவு 9 மணிக்கு அலங்கார தீபாாதனை நடைபெற்றது. இதில் திரளானோா் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை காவடி பிறை ஐயப்ப பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.