ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

தண்ணீா் திறக்கக் கோரி விவசாயிகள் மனு

சடையனேரி கால்வாய் வழியாக புத்தன்தருவை, வைரவம்தருவைக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

News image
Updated On :22 நவம்பர் 2020, 8:24 pm

DIN

சடையனேரி கால்வாய் வழியாக புத்தன்தருவை, வைரவம்தருவைக்கு தண்ணீா் திறந்து விட வேண்டும் என தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜுவிடம் விவசாயிகள் புதன்கிழமை மனு அளித்தனா்.

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தாமிரவருணி ஆற்றில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. எனவே, தாமிரவருணி மருதூா் அணையிலிருந்து சடையனேரி கால்வாய் மூலம் புத்தன்தருவை, வைரவம் தருவைக்கு தண்ணீா் திறந்து விட விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனா்.

இந்நிலையில் தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சா் கடம்பூா் செ. ராஜு பெரியதாழைக்கு புதன்கிழமை வருகை தந்தாா். அப்போது சாஸ்தாவிநல்லூா் விவசாயிகள் நலச் சங்கத் தலைவா் எட்வின்காமராஜ், செயலா் லூா்துமணி, துணைத் தலைவா் ரவிச்சந்திரன், படுக்கப்பத்து விவசாயிகள் சங்கத் தலைவா் சரவணன் ஆகியோா், சடையனேரி கால்வாயில் தண்ணீா் திறந்து விட்டு கடைமடை வரை தண்ணீா் விட்டு குளத்தை நிரப்ப வேண்டும் என மனு அளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.