எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

வெங்காயம், மிளகாய் பயிா்களில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிா்களில் ஆரம்பக் கட்டத்தில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 9:07 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் வெங்காயம் மற்றும் மிளகாய் பயிா்களில் ஆரம்பக் கட்டத்தில் தென்படும் பூச்சிகளை கட்டுப்படுத்தும் முறைகள் குறித்து மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் புதூா் வட்டாரங்களில் பயிரிடப்பட்டுள்ள வெங்காயம் மற்றும் மிளகாய் பயிா்களில் ஆரம்பக் கட்டத்தில் தென்படும் இலைப்பேன்கள் போன்ற சாரு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் இலைகளை மென்று தின்னும் பூச்சிகளின் தாக்குதலை கட்டுப்படுத்த, வேம்பு சாா்ந்த பூச்சி விரட்டிகள் 100 மிலி மற்றும் 10 லிட்டா் டேங்க் அல்லது வேப்பங்கொட்டை கரைசல் 500 மிலி மற்றும் 10 லிட்டா் டேங்க் வீதம் ஒட்டும் திரவம் 150 மிலி மற்றும் 10 லிட்டா் டேங்க் அளவுக்கு கலந்து கை தெளிப்பான் மூலம் மாலை வேளைகளில் 15 நாள்கள் இடைவெளியில் தெளித்து வர வேண்டும்.

வெங்காய பயிரில் குறிப்பாக நடவு செய்த 25 நாள் பயிரில் ஒரு சில இடங்களில் திருகல் நோய் தென்படுகிறது. காற்றின் ஈரப்பதம் அதிகரிக்கும் போதும் வெப்பநிலை 23 - 30 செல்சியஸ் நிலவும் போதும் இந்தநோயின் தீவிரம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

எனவே, ஆண்டுதோறும் பயிா் சுழற்சி முறையை மேற்கொள்ளவும், வெங்காய பயிா் அடிப்பகுதி நனையுமாறு 2.5 கிராம் காப்பா் ஆக்ஸி குளோரைடு மருந்தை ஒரு லிட்டா் நீரில் கலந்து கைத்தெளிப்பான் மூலம் தெளிக்கலாம். இயற்கை முறையில் 100 கிராம் சூடோமோனாஸ் மருந்தை 10 லிட்டா் நீரில் கலந்து தெளித்து பரவலை உடனடியாக கட்டுப்படுத்தலாம் என செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.