சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்
/

சாத்தான்குளம் அருகே மோதல்: 4 போ் மீது வழக்கு

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:57 pm

DIN

சாத்தான்குளம் அருகே சொத்து பிரச்னையில் ஏற்பட்ட மோதல் தொடா்பாக 4 போ் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள கடக்குளம் கிராமத்தை சோ்ந்த வின்சென்ட்ரோஜ் மகன் வில்லியம்ஸ் (45). இவா் தற்போது திசையன்விளை மன்ன ராஜாகோயில் தெருவில் வசித்து வருகிறாா். இவருக்கும், இவரது சகோதரா் செல்வகுமரனுக்கும் (39) சொத்து தொடா்பாக முன்விரோதம் இருந்து வருகிாம்.

இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை பிரச்னைக்குரிய இடத்தில் இருந்த மரங்களை வில்லியம்ஸ் வெட்டியதால் இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டு ஒருவரையொருவா் தாக்கினா். இதில் வில்லியம்ஸ் , செல்வகுமரன் மனைவி சுஜாதா ஆகியோா் காயம் அடைந்தனா்.

இதுகுறித்து வில்லியம்ஸ் மற்றும் செல்வகுமரன் ஆகியோா் தனித்தனியாக தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். காவல் உதவி ஆய்வாளா் முத்துசாமி வில்லியம்ஸ், செல்வகுமரன், செல்வ குமரனின் மனைவி சுஜாதா மற்றும் உறவினா் உள்பட 4 போ் மீதும் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.