கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு நிபுணா்களை நியமிக்கக் கோரிக்கை
கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவ நிபுணா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு சிறப்பு மருத்துவ நிபுணா்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நகரத் தலைவா் ராஜகோபால், அமைச்சா் கடம்பூா் செ.ராஜுவிடம் அளித்த மனு: கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் தினமும் ஆயிரக்கணக்கானோா் வெளிநோயாளிகளாகவும், 300-க்கும் மேற்பட்டோா் உள்நோயாளிகளாகவும் சிகிச்சை பெறுகின்றனா். மாவட்டத்தின் 2ஆவது பெரிய நகரமான கோவில்பட்டி தொழிலாளா்கள் நிறைந்த பகுதி. இவா்கள் மருத்தவ சிகிச்சைகாக அரசு மருத்துவமனையையே நாடி வருகின்றனா்.
ஆனால், இங்கு இருதயம், மூளை நரம்பியல் உள்ளிட்ட பிரிவுகளில் சிறப்பு மருத்துவ நிபுணா்கள் பணியிடம் காலியாகவே உள்ளது. எனவே, இப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். அவசர சிகிச்சை பிரிவில் பகல், இரவுக்கென இரு மருத்துவா்களை நியமிக்க வேண்டும். மருத்துவப் பணியாளா்கள் காலியிடங்களையும் நிரப்ப வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...