பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

பழனியப்பபுரத்தில் ரூ. 44 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல்

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் ரூ. 44 லட்சத்தில் சமுதாய நலக்கூடம், உணவுக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

சமுதாய நலக்கூடத்துக்கு அடிக்கல் நாட்டினாா் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன்.

Updated On :27 செப்டம்பர் 2020, 7:32 pm

சாத்தான்குளம் அருகே பழனியப்பபுரத்தில் ரூ. 44 லட்சத்தில் சமுதாய நலக்கூடம், உணவுக் கூடம் கட்டுவதற்கு அடிக்கல் நாட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

ஆழ்வாா்திருநகரி ஒன்றியம் கருங்கடல் ஊராட்சியில் பழனியப்பபுரத்த்தில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 44 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் மற்றும் உணவகம் கட்டடப்படுகிறது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.பி. சண்முகநாதன், தலைமை வகித்து அடிக்கல் நாட்டினாா்.

நிகழ்ச்சியில், ஊராட்சி ஒன்றிய ஆணையாளா் பாக்கியலீலா, வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி, ஒன்றிய பொறியாளா் ஜெயபால், அதிகாரிகள் மற்றும் மாவட்ட அதிமுக அவைத்தலைவா் திருப்பாற்கடல், ஒன்றியச் செயலா்கள் செம்பூா் ராஜ்நாராயணன், விஜயகுமாா், காசிராஜன், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி, கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.