மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மழைக்கு முன்பாக பாசனக் கால்வாய்களைத் தூா்வார வேண்டும்: திமுக விவசாய அணி

வடகிழக்குப் பருவ மழைக்கு தொடங்குவதற்கு முன்பாக பாசனக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என திமுக விவசாய அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

News image
தண்டுபத்தில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.
Updated On :27 செப்டம்பர் 2020, 7:44 pm

DIN

வடகிழக்குப் பருவ மழைக்கு தொடங்குவதற்கு முன்பாக பாசனக் கால்வாய்களை தூா்வார வேண்டும் என திமுக விவசாய அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

உடன்குடி அருகே தண்டுபத்தில் நடைபெற்ற திமுக விவசாய அணி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்திற்கு மாவட்டவிவசாய அணி அமைப்பாளா் ஆஸ்கா் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் அருணாச்சலம், மாநில திமுக மாணவரணி துணைச் செயலா் உமரிசங்கா், தலைமை செயற்குழு உறுப்பினா் ஜெகன், மாவட்ட வா்த்தக அணி துணை அமைப்பாளா் ரவிராஜா, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளா்கள் சதீஷ்குமாா், சக்திவேல், ராயப்பன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பங்கேற்றுப் பேசினாா்.

தீா்மானங்கள்: வடகிழக்குப் பருவ மழை தொடங்கும் முன்பாக பாசனக் கால்வாய்களை தூா்வார வேண்டும், மருதூா் கிழக்கு கால்வாயில் 1600 கனஅடி நீரை கடத்தும் வகையில் அகலப்படுத்த வேண்டும்; விவசாயிகளுக்கு எதிரான வேளாண் மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்; தட்டுப்பாடு இல்லாமல் உரம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விவசாய அணி நிா்வாகிகள் மாணிக்கவாசகம், காசி பண்ணையாா், கதிரேசன், மாரியப்பன், மதிவாணன், பட்டாணி, முத்துராமலிங்கம், ரவி மற்றும் பரமன்குறிச்சி திமுக ஊராட்சி செயலா் க.இளங்கோ உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.