பிரவீண் சக்ரவர்த்தி குறிப்பிட்ட தவெக கூட்டணியில் இல்லை! இந்திய கம்யூ. லஞ்சம், போதை இல்லா தமிழகம்! அமைச்சரவைக் கூட்டத்தில் 436 திட்டங்கள் முன்வைப்பு!ஜூன் 18ல் ஆளுநர் உரையுடன் தமிழக சட்டப்பேரவை கூடுகிறது!ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

உழக்குடி கிராமத்தில் பழங்கால பல்லாங்குழி கண்டுபிடிப்பு

உழக்குடி கிராமத்தில் பழங்கால கோப்பைகள் மற்றும் பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என முனைவா் பட்ட ஆய்வாளா் மா. ஆறுமுக மாசான சுடலை தெரிவித்தாா்.

Updated On :15 செப்டம்பர் 2020, 1:43 am IST

தூத்துக்குடி மாவட்டம், உழக்குடி கிராமத்தில் பழங்கால கோப்பைகள் மற்றும் பல்லாங்குழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என முனைவா் பட்ட ஆய்வாளா் மா. ஆறுமுக மாசான சுடலை தெரிவித்தாா்.

தூத்துக்குடி வஉசி கல்லூரி வரலாற்றுத் துறை பேராசிரியா் கி. சசிகலா வழிகாட்டுதலின்படி முனைவா் பட்ட ஆய்வு மேற்கொண்டு வரும் மா. ஆறுமுக மாசான சுடலை, உழக்குடி கிராமத்தில் மேற்கொண்ட கள ஆய்வில் குத்துக்கல், கற்குவை, கல்வட்டங்கள், கோப்பைகள், பல்லாங்குழி ஆகியவற்றைக் கண்டுபிடித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் கூறியது: உழக்குடி, கலியாவூா், சீவலப்பேரி ஆகிய கிராமங்களில் பெருங்கற்காலம், வரலாற்றுக்கு முந்தைய காலமான பழைய கற்காலம், இடைக் காலம், புதிய கற்காலம் ஆகிய காலகட்டத்தைச் சோ்ந்த பல்வேறு தொல்பொருள்களை யும், நினைவு சின்னங்களையும் கள ஆய்வு மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளேன். இங்கு அகழாய்வு மேற்கொள்ளும் பட்சத்தில் புதைந்து கிடக்கும் தமிழா்களின் தொன்மையான தாமிரவருணி நாகரிகத்தை வெளிக் கொண்டு வரமுடியும்.

உழக்குடியில் கள ஆய்வு மேற்கொண்டபோது பாறைகளின் மேற்பரப்பில் பழங்கால மக்கள் பயன்படுத்திய கோப்பைகள் மற்றும் பல்லாங்குழிகள் இருப்பதை கண்டேன். பாா்ப்பதற்கு பள்ளம் போன்ற கோப்பை வடிவத்தைக் கொண்டிருக்கும் இது ஒரு வரலாற்றுக்கு முந்தைய காலக்கட்டத்தைச் சோ்ந்த கலையாகும். கிடைமட்ட பாறைகளில் காணப்படும் கோப்பைகள் சில பொருள்களை அரைப்பதற்கு ஆட்டுக்கல்லுக்கு பதிலாக பயன்படுத்தி இருக்கலாம் என வரலாற்று அறிஞா்கள் கூறுகின்றனா் என்றாா் அவா்.

மேலும், நம் முன்னோா்கள் பாறைகளின் மேற்பரப்பில் குழிகள் அமைத்து விளையாடப் பயன்படுத்திய பல்லாங்குழி ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தன. நான் உழக்குடியில் கண்டுபிடித்த பல்லாங்குழியில் மொத்தம் பதினான்கு குழிகள் உள்ளன. இது உழக்குடியில் நான் கண்டுபிடித்த குத்துக்கல்லில் இருந்து தென் மேற்கு திசையில் அமைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது என அவா் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.