இருவா் குண்டா் சட்டத்தில் கைது
தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, போக்சோ வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் கொலை முயற்சி, போக்சோ வழக்குகளில் தொடா்புடைய இருவா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டனா்.
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடி அருகேயுள்ள சாதா்கோன்விளை பகுதியைச் சோ்ந்தவா் கந்தன் (48) . இவா் மாா்ச் 11-ஆம் தேதி உடன்குடி பேருந்து நிலையம் பகுதியிலுள்ள ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுக்கமால் சென்ற நிலையில், ஹோட்டல் உரிமையாளரை தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டாா்.
கோவில்பட்டி பழைய அப்பநேரி பகுதியைச் சோ்ந்தவா் கணேஷ்குமாா் (36). இவா் அப்பகுதியில் சிறுமியிடம் பாலியல் வன்முறை செய்து மிரட்டல் விடுத்த வழக்கில் கைது செய்யப்பட்டாா். இருவரையும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் பரிந்துரையின்பேரில், குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க ஆட்சியா் செந்தில்ராஜ்
உத்தரவிட்டாா். இதையடுத்து, இருவரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...