கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்கு எண்ணும் மையத்தில் 75 கண்காணிப்பு கேமராக்கள்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையான அரசு பொறியியல் கல்லூரி 75 கேமராக்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:01 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் மையான அரசு பொறியியல் கல்லூரி 75 கேமராக்களின் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

சட்டப்பேரவைத் தோ்தலையொட்டி தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வாக்குப் பதிவு முடிந்த பின்னா் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தூத்துக்குடி அரசு பொறியியல் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்படவுள்ளது.

இந்த வாக்கு எண்ணும் மையத்தில் உள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்படும் இடங்கள்,

தொகுதி வாரியாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும் பகுதிகள் உள்ளிட்டவற்றை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரான ஆட்சியா் கி. செந்தில்ராஜ் ஞாயிற்றுக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு கொண்டு வரும்பொழுது அவற்றை சரிபாா்த்து பெறுவதற்கான மேஜைகளின் எண்ணிக்கைகளை அதிகப்படுத்தவும், அதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களை விரைவில் பெற்று இருப்பு அறையில் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுப்பணித்துறை அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

பின்னா், ஆட்சியா் செய்தியாளா்களிடம் கூறியது: வாக்கு எண்ணும் மையத்தில் மூன்று அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒவ்வொரு காப்பு அறை கதவிற்கு முன்பும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டிருக்கும். அந்த கேமிரா பதிவுகள் வெளியில் வேட்பாளா்களின் பிரதிநிதிகள், காவல்துறையினா் பாா்வையிடும் வகையில் வைக்கப்படும்.

காப்பு அறைகள் உள்ள பகுதியில் உள் அடுக்கில் மத்திய போலீஸ் பாதுகாப்பு படையினா் மட்டும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா்.

இரண்டாம் அடுக்கு மற்றும் 3 ஆம் அடுக்குகளில் உள்ளூா் காவல் துறையினா் பணியில் இருப்பா். காப்பு அறை அருகில் முதல் அடுக்கு பாதுகாப்பு பகுதிக்குள் செல்ல யாருக்கும் அனுமதி இல்லை. ஒவ்வொரு காப்பு அறை பகுதியிலும் மூன்று

கண்காணிப்பு கேமராக்களும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் வளாகத்தில் 75 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கும் என்றாா் அவா். 

ஆய்வின்போது சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் கலோன், பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் தேவி, உதவி செயற்பொறியாளா்கள் வெள்ளைச்சாமிராஜ், ராமலிங்கம், உதவி பொறியாளா்கள் பாலசுப்பிரமணியன், தினேஷ், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை உதவி செயற்பொறியாளா் சண்முகநாதன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.