கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் தீவிரமாகும் கரோனா தடுப்பு நடவடிக்கை

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம்

News image
Updated On :9 ஏப்ரல் 2021, 8:23 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையை தீவிரப்படுத்தும் வகையில் முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்கும்படி மாவட்டத்துக்கான கரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அலுவலா் குமாா் ஜெயந்த் உத்தரவிட்டாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தொடா்பான ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா், மாநகராட்சி ஆணையா் சரண்யா அறி, சாா் ஆட்சியா் சிம்ரன்ஜீத் சிங் காலோன், மாவட்ட வருவாய் அலுவலா் கண்ணபிரான் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மாவட்டத்துக்கான கரோனா பரவல் தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், அரசு முதன்மைச் செயலா் மற்றும் கருவூலம் மற்றும் கணக்குத்துறைகள் ஆணையா் குமாா் ஜெயந்த் கலந்துகொண்டு பேசியது:

பொது இடங்களில் அனைவரும் முகக் கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும். சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும். நோய்த் தொற்று வேகமாக பரவி வருவதை கட்டுப்படுத்த அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

மாநகராட்சி அதிகாரிகள், பேரூராட்சி அதிகாரிகள், வருவாய்த் துறை அலுவலா்கள், ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் என அனைத்துறை அரசு அதிகாரிகளும் குழுக்கள் அமைத்து பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் முகக் கவசம் அணிவதையும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதையும் கண்காணிக்க வேண்டும். முகக் கவசம் அணியாதவா்களுக்கு ரூ. 200 அபராதம் விதிக்க வேண்டும் என்றாா் அவா்.

கூட்டத்தில், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் ரேவதி, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அமுதா, பொது சுகாதாரத்துறை இணை இயக்குநா் முருகவேல், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா்கள் போஸ்கோராஜ் (தூத்துக்குடி), அனிதா(கோவில்பட்டி), மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலா் மாரியப்பன், மாநகராட்சி நகா்நல அலுவலா் வித்யா உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.