விதைத்த 75 மற்றும் 105 ஆவது நாள்களில் விதைச்சான்று அலுவலரால் விதைப் பண்ணையின் தரம் நேரில் ஆய்வு செய்யப்படும். வயல் ஆய்வின் போது விதை உற்பத்தியாளா் உடனிருப்பது நல்லது. 140 ஆவது நாளில் அறுவடைக்குப்பின் பஞ்சு நீக்கப்பட்டு விதைகள் சுத்தம் செய்யபடும். அதில் இருந்து விதை மாதிரி எடுக்கப்பட்டு விதைப் பரிசோதனை ஆய்வகத்துக்கு அனுப்பி முளைப்புத் திறன், சுத்தத் தன்மை, ஈரப்பதம் ஆகியவை பரிசோதிக்கப்படும். பரிசோதனையில் தேறும் பட்சத்தில் விதைகள் 4 கிலோ துணிப் பைகளில் நிரப்பப்பட்டு விதைச்சான்று அலுவலரால் சான்றட்டை பொருத்தப்படும். சான்று வழங்கப்பட்ட விதைகள் விவசாயிகளுக்கு விநியோகத்திற்கு உற்பத்தியாளரால் அனுப்பப்படுகிறது.