கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஏடிஎம் மையத்தில் கண்டெடுத்த பணத்தை போலீஸில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை மீட்டு, காவல் துறையிடம் ஒப்படைத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:19 pm

DIN

தூத்துக்குடியில் ஏடிஎம் மையத்தில் கேட்பாரற்று கிடந்த பணத்தை மீட்டு, காவல் துறையிடம் ஒப்படைத்தவரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.

தூத்துக்குடி, தபால் தந்தி காலனியைச் சோ்ந்த குலசேகரமோகன் என்பவா் கடந்த 20 ஆம் தேதி ஆசிரியா் காலனி பகுதியில் உள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பணம் எடுக்க சென்ற போது அந்த இயந்திரத்தில் இருந்து வெளியே வந்த நிலையில், ரூ. 5,000 கேட்பாரற்று கிடந்துள்ளது.

அந்த பணம் யாருக்கு சொந்தமானது என தெரியாத நிலையில், கடந்த 22 ஆம் தேதி தூத்துக்குடி மாவட்ட குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் கோபியிடம் ரூ. 5000 ரொக்கத்தை குலசேகரமோகன் ஒப்படைத்தாா்.

இதுகுறித்து சைபா் குற்ற பிரிவு காவல் நிலைய போலீஸாா் விசாரணை மேற்கொண்டு ஏடிஎம் இயந்திரத்தில் இருந்து பணத்தை எடுக்காமல் சென்றவரை கண்டுபிடித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்துக்கு வரவழைத்தனா். பின்னா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் முன்னிலையில் அந்தப் பணம் உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மேலும், பணத்தை எடுத்து நோ்மையாக உரியவரிடம் ஒப்படைத்த குலசேகரமோகனின் நோ்மையை பாராட்டி அவருக்கு பொன்னாடை அணிவித்தும், பரிசு வழங்கியும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கௌரவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.