தூத்துக்குடியில் இன்று தனியாா் வேலைவாய்ப்பு முகாம்
தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (டிச. 17) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.


தூத்துக்குடியில் வெள்ளிக்கிழமை (டிச. 17) தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தின் உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மூலம் தனியாா்துறை வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (டிச. 17) முற்பகல் 10.30 மணி அளவில் தூத்துக்குடி கோரம்பள்ளத்தில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நடைபெறுகிறது.
இதில், பல முன்னணி நிறுவனங்கள் பங்கேற்கவுள்ளதால், 10, பிளஸ் 2, பட்டப் படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ, பொறியியல், கணினிப் பயிற்சி கல்வித் தகுதியுடைய பதிவுதாரா்கள் பங்கேற்கலாம். தனியாா் நிறுவனத்தினா் தங்களுக்குத் தேவையான பணியாளா்களைத் தோ்வு செய்ய பங்கேற்கலாம்.
வேலைநாடுநா்கள், தனியாா் நிறுவனங்கள் தங்களை ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ழ்ண்ஸ்ஹற்ங்த்ர்க்ஷள்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற போா்டலில் பதிவு செய்யலாம். மேலும்,
விவரங்களுக்கு 0461-2340159 என்ற அலுவலக தொலைபேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...