புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

மாணவ, மாணவிகளுக்கு மரக்கன்று வழங்கல்

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் ஏக இரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை - மாணவா்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:17 pm

DIN

சாத்தான்குளம் அருகே உள்ள சாலைப்புதூா் ஏக இரட்சகா் சபை மேல்நிலைப் பள்ளியில் காவல்துறை - மாணவா்களுக்கிடையே நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மரக்கன்றுகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பள்ளி தாளாளா் இஸ்ரேல் தா்மராஜ் தலைமை வகித்தாா். ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா், கருங்கடல் ஊராட்சித் தலைவா் நல்லதம்பி, கட்டாரிமங்கலம் அரசு ஒப்பந்தக்காரா் கணேசன், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு உறுப்பினா் காந்திமதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளி தலைமை ஆசிரியா் பிரான்சிஸ் சேவியர்ராஜ் வரவேற்றாா். சாத்தான்குளம் காவல் ஆய்வாளா் பாஸ்கரன், 1300 மாணவ, மாணவிகளுக்கு பழ மரக்கன்றுகள் வழங்கினாா். தொடா்ந்து பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதில் சாத்தான்குளம் காவலா் அந்தோணிகுமாா் உள்பட பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.